சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள மாநில, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டத்தை நடத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோயம்புத்தூரை சேர்ந்த வக்கீல் பன்னீர்செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர் மீதான தீண்டாமையை தடுப்பதற்காக கடந்த 1989ம் ஆண்டு மத்திய அரசு வன்கொடுமை தடை சட்டம் கொண்டுவந்தது. இதுதொடர்பாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாநில அளவில் ஆண்டுக்கு இரு முறையும் மாவட்ட அளவில் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் கூடி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பது ஆகியன தொடர்பாக கலந்தாலோசித்து மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் மார்ச் 31ம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.