சென்னை: கிண்டியில் உள்ள கட்டிடக் கலை கல்லூரியில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில், பி.ஆர்க் மாணவர் சேர்க்கை கோரி விண்ணப்பிக்க அனுமதி மறுத்ததை எதிர்த்து, சிங்கப்பூரைச் சேர்ந்த ஷிவானி அருண் என்ற மாணவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 15 சதவீத இட ஒதுக்கீடு என்பது, அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் வழங்க வேண்டுமா அல்லது கூடுதலாக வழங்க வேண்டுமா என்று கட்டிடக்கலை கவுன்சில் முடிவை அறிவிக்காததால், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.