சென்னை: முழு ஊரடங்கை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இதை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் நேற்று வழக்கத்தை விட குடிமகன்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனவும் அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் வாரந்தோறும் அதிகரித்து காணப்படுகிறது. அந்தவகையில் இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதை முன்னிட்டு நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்தது. சாக்குப்பை, அட்டைபெட்டி உள்ளிட்டவைகளை கொண்டுவந்து குடிமகன்கள் மதுவகைகளை வாங்கிச்சென்றனர்.