ராஜபாளையம் அருகே சேதமடைந்த தரைப்பாலத்தால் மக்கள் கடும் அவதி

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சேதமடைந்த தரைப்பாலத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியிலிருந்து சொக்கநாதன்புத்தூர் செல்லும் மங்கம்மாள் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்து படுமோசமாக உள்ளது. மேலும் இச்சாலையிலுள்ள தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. கனரக வாகனங்கள், விவசாய பணிக்கு செல்லும் டிராக்டர் மற்றும் மினி பேருந்துகள்,  திருவிழா காலங்களில் பேருந்துகள் மாற்றுப்பாதையாக இச்சாலையை பயன்படுத்தி வந்தன.

தற்போது சாலை மற்றும் தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் அனைத்து வாகனங்களும் மெயின்ரோடு வழியாக ஊருக்குள் வந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சாலை மற்றும் தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சாலை மற்றும் தரைப்பாலத்தை சீரமைக்க கோரி தமிழக முதல்வருக்கு மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.

Related Stories: