×

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை

திருச்சி: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையை சேர்ந்த ஆனந்த்(26) திருச்சி ஜீயபுரம் வாத்தலை காவல் நிலையத்தில் 2019ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்துள்ளார். ஆனந்த் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதை வழக்கமாக செய்துள்ளார். இதற்காக தன்னுடன் பணிபுரியும் நண்பர்களிடம் அவ்வப்போது கடன் வாங்கி வந்ததாகவும் அவ்வாறு வாங்கிய கடனை திரும்பி கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்தது தெரிய வருகிறது.

மேலும் தனது வீட்டருகே பெண் காவலர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இரு வீட்டாருக்கும் பிரச்சனைகள் நடந்து கொண்டிருந்திருக்கிறது. ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததும், தன்னுடைய காதலும் கைகூடவில்லை என மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்பியவர் இரவு 11 மணிக்கு மேல் தனது வீட்டுக்கு பின்னால் உள்ள மாட்டுக் கொட்டகையில் தனது அம்மாவின் சேலையால் தூக்கு மாட்டி இறந்துள்ளார். இதனையடுத்து இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : policeman ,suicide ,Trichy , Trichy, Police, Suicide, Online Rummy
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...