செங்கோட்டை: செங்கோட்டை அருகே உள்ள வடகரை. மேக்கரை பகுதிக்குட்பட்ட மூனுசுழி, அண்ணாநகர், ஊர்பத்து, கரிசல்குடியிருப்பு, பருத்திகாட்டுசெவல், வாவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் செவ்வாழை, ரசகசலி, வயில்வாழை, ரோபஸ்டா நாட்டுவாழை போன்ற வாழைகள் பயிரிடப்பட்டிருந்தன.
தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் பல லட்சம் மதிப்பிலான உயர்ரக செவ்வாழை உள்ளிட்ட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.