வி.கே.புரம்: நெல்லை தென்காசி மாவட்ட அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சேர்வலாறு அணைநீர் மட்டம் கடந்த 2 நாளில் 25 அடி உயர்ந்தது. குண்டாறு பகுதியில் 51 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை 7 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் தென்காசி மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீ.) வருமாறு: குண்டாறு-51 மி.மீ., அடவிநயினார் கோவில் அணை-37, சேர்வலாறு அணை-1 , கடனா-12 , ராமநதி 5, கருப்பாநதி 5, ஆய்க்குடி-5.20, தென்காசி- 9.40, செங்கோட்டை- 28, சிவகிரி- 15 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது.