கோவை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு மரங்கள் வேருடன் பெயர்ந்து விழுந்தும், மண் சரிவும் ஏற்பட்டும் பலத்த சேதமடைந்துள்ளது. இந்நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேற்று நீலகிரி மாவட்டத்திற்கு நேரடியாக சென்று சேதங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.