×

நீலகிரியில் ஆய்வு செய்து விட்டு திரும்பிய அமைச்சர்கள் காரை வழிமறித்த காட்டு யானை

கோவை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு மரங்கள் வேருடன் பெயர்ந்து விழுந்தும், மண் சரிவும் ஏற்பட்டும் பலத்த சேதமடைந்துள்ளது.  இந்நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேற்று நீலகிரி மாவட்டத்திற்கு நேரடியாக சென்று சேதங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

நேற்று இரவு கோவை திரும்பும் வழியில் மலைப்பாதையில் பர்லியார் அருகே திடீரென காட்டு யானை ஒன்று சாலையில் நின்று கொண்டு வாகனத்தை வழிமறித்தது. பாதுக்காப்பு வாகனங்களுடன் காத்திருந்த அமைச்சர்கள் காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்ற பின் அங்கிருந்து கிளம்பி கோவைக்கு வந்தனர்.

Tags : ministers ,Nilgiris , Nilgiris, Ministers, Wild Elephant
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...