ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் குப்பை தொட்டி அருகில் நேற்றிரவு 40 வயது ஆண் ஒருவர் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சடலம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் கணபதிபுரம் உள்ள வீதியில் உள்ள குப்பை தொட்டியில். இன்று காலை அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுவதற்காக சென்றுள்ளனர். அப்போது குப்பை தொட்டி அருகில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதி மக்கள் உடனடியாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.