×

அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரியில் அதிகனமழையும், கோவை, தேனியில் மிக கனமழையும் பெய்யக்கூடும்: சென்னை வானிலை மையம் எச்சரிச்சை!

சென்னை: அதீத கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்  தொடர்வதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நிலகிரி மாவட்டத்தின் ஒருசில இடங்களில் அதிகனமழையும், கோவை, தேனி மாவட்டங்களின் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

மேலும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  அடுத்த 48 மணி நேரத்திற்கு  நீலகிரி, கோவை மாவட்டங்களின் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனழையும், தேனி மாவட்டத்தின் ஒருசில இடங்களில் கனமழையும், உள் தமிழகத்தில் சேலானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் சேலான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 34 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், பந்தலூரில் 19 செ,மீ மழையும், ஹாரிசனில் 18 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், அவலாஞ்சியில் 11 செ.மீ, நடுவட்டம், கூடலூர் பஜார் பகுதிகளில் தலா 8 செ.மீ, மேல் பவானியில் 7 செ.மீ, மேல் கூடலூரில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் சின்னக்கல்லார் பகுதியில் 13 செ.மீ மழையும், சோலையாரில் 11 செ.மீ மழையும், சின்கோனாவில், 9 செ.மீ மற்றும் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

* ஆகஸ்டு 8ம்(இன்று) தேதி, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரிபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்திலும், மகாராஷ்டிரா, குஜராத் கடலோர பகுதியை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்திலும், கேரளா-கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

* ஆகஸ்டு 9ம் தேதி, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்திலும், மகாராஷ்டிரா, குஜராத் கடலோர பகுதியை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்திலும், கேரளா-கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

* ஆகஸ்டு 10ம் தேதி, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு, அரபிக்கடல், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்திலும், மகாராஷ்டிரா, குஜராத் கடலோர பகுதியை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

* ஆகஸ்டு 11ம் தேதி, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்திலும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

* ஆகஸ்டு 12ம் தேதி, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் அலை முன்னறிவிப்பு: தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 09.08.2020 இரவு 11.30 மணி வரை உயர் கடல் அலைகள் 3.4 முதல் 4.4 மீட்டர் வரை எழும்பக்கூடும், என குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Chennai Meteorological Department Warning ,Coimbatore ,Theni ,Nilgiris , Chennai, Meteorological Center, Rain, Nilgiris, Coimbatore
× RELATED தேனி புதிய பஸ்நிலையம் அருகே பை-பாஸ்...