ஒரே நாளில் 61,537 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.88 லட்சத்தை தாண்டியது: இதுவரை 42,518 பேர் பலி.!!!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20.88 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை  14.27 லட்சத்தை தாண்டியது. நாட்டில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர்  கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின்  மொத்த எண்ணிக்கையானது 20,88,611 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,19,088 பேர் சிகிச்சை பெற்று வரும்  நிலையில்,14,27,005 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 933 உயிரிழப்புக்கள் பதிவாகி  உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 42,518 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில்  குணமடைந்தோர் விகிதம் 68.32% ஆக உயர்ந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 2.04% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை  பெறுபவர்கள் விகிதம் 29.64% ஆக உள்ளது.

மாநிலங்கள் வாரியான விவரம்!!

*மகாராஷ்டிராவில் நேற்று 10,483 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,90,262 ஆகி உள்ளது. நேற்று  300 பேர் உயிர் இழந்து மொத்தம் 17,092 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 10,906 பேர் குணமடைந்து மொத்தம்  3,27,281 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 1,45,889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*தமிழகத்தில் நேற்று 5,880 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆகி உள்ளது  இதில் நேற்று  119 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,690 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,488 பேர் குணமடைந்து மொத்தம்  2,27,575 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 52,759 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*டெல்லியில் நேற்று 1,192 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,42,723 ஆகி உள்ளது இதில் நேற்று  23 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,082 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1108 பேர் குணமடைந்து மொத்தம்  1,28,232 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 10,409 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: