மும்பை: விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்வதற்கான நாட்டின் முதல் ‘கிசான் ரயில்’ சேவை நேற்று தொடங்கப்பட்டது. மகாராஷ்டிராவில் உள்ள தேவ்லாலி மற்றும் பீகாரில் உள்ள தானாப்பூர் இடையே இந்த ரயில் இயக்கப்படுகிறது. தேவ்லாலியில் இருந்து நேற்று புறப்பட்ட இந்த ரயிலை, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் வீடியோ கான்பரன்சிங் மூலம் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.