×

சாத்தான்குளம் போலீஸ் விசாரணைக்கு சென்றவர் பலி சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? ஐகோர்ட் கிளை அதிருப்தி

மதுரை:தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் பலியானதாக கூறி அவரது தாயார் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதி ஆர்.பொங்கியப்பன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘சிபிசிஐடி விசாரணை நடக்கும் நிலையில் ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. சிபிசிஐடி தரப்பில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை நீதாக்கல் செய்யலாமே’’ எனக்கூறி விசாரணையை செப். 8க்கு தள்ளி வைத்தார்.

Tags : police station ,CPCIT ,Sathankulam , Sathankulam , police, CID case, High Court Branch
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து