அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு: இன்ஜி. கல்லூரிகளில் செப்.12 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும்

சென்னை: அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளில், செப்டம்பர் 12ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்வி குழுமத்தின் மூலம், ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகள் (முதல் செமஸ்டர் தவிர்த்து), பிஇ, பிடெக் படிப்புகளில்(பகுதி நேரம்) 3, 5, 7 செமஸ்டர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கும். கடைசி பணிநாள் அக்டோபர் 26ம் தேதி.  

செய்முறைத் தேர்வுகள் அக்டோபர் 28ம் தேதி தொடங்கும். செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் 9ம் தேதியுடன் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செமஸ்டருக்கான நாள் டிசம்பர் 14ம் தேதி தொடங்கும். இளநிலை, முதுநிலை படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: