திருவனந்தபுரம்: கேரளா நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களின் முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் மாநில காவல்துறையும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இரவிலும் மீட்பு பணிகளை தொடர்ந்து தொய்வின்றி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.