டெல்லி : கேரள நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.கேரளாவின் இடுக்கி ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். துக்கமான இந்த நேரத்தில் என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.