அதிர்ச்சி மயக்கத்தில் நகை பிரியர்கள்: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ. 43,328-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ. 43,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை உயர்வில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்தது. ஆனால் அனைத்துக்கும் சேர்த்து நேற்று ஒரேநாளில் மொத்தமாக வேட்டு வைத்தது போல தங்கம் விலை எகிறி இருக்கிறது. அதாவது தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ.43,328க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.42 உயர்ந்து ரூ.5,416க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு கிராம் 83 ரூபாய் 60 காசுக்கும், ஒரு கிலோ ரூ.83 ஆயிரத்து 600-க்கும் வெள்ளி விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்கான குறியீடு, வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் சரிந்து வருகிறது.

இது போன்ற காரணங்களினால் பெரிய முதலீட்டாளர்கள் பீதியில் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்து வருவதாலும், முதலீட்டாளர்களை போல எல்லா நாட்டுமக்களும் வைப்பு நிதியில் முதலீடு செய்வதை தவிர்த்து தங்கத்தின் மீது புதிதாக முதலீடு செய்ய தொடங்கி இருப்பதாலும் தங்கம் விலை இதுபோல் அதிரடியாக உயருவதாக சென்னை வைரம், தங்கம் வியாபாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

Related Stories: