மதுரை : சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று சி.பி.சி.ஐ.டி.க்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர்.,அத்துடன் விசாரணையை முடித்து ஒரு மாதத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.