பள்ளிகள் திறந்தவுடன் வகுப்புகளை 2 ஷிப்டுகளில் நடத்த அறிவுறுத்தப்படும் : மத்திய அரசு!!

டெல்லி : செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகஸ்ட் இறுதியில் மத்திய அரசு வெளியிடும். இதனிடையே பள்ளிகள் திறக்கும் பட்சத்தில் சில முக்கிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. அவை பின்வருமாறு..

*வகுப்புகளை 2 ஷிப்டுகளில் நடத்தவும் பள்ளிகள் அறிவுறுத்தப்படும்.

*ஒவ்வொரு ஷிப்டிலும் 33 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருக்கலாம்,

*காலை 8 மணியில் இருந்து 11 மணி வரை ஒரு ஷிப்ட், மாலை 3 வரை 2-வது ஷிப்ட் என வகுப்புகள் நடைபெறும்.

*ஒவ்வொரு மாணவர்களுக்கும் இடையே 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: