திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை ஆக.14 வரை கைது செய்ய இடைக்கால தடை

மதுரை: திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை ஆக.14 வரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. பணமோசடி வழக்கில் விசாரணைக்கு வரும்போது ஞானவேல்ராஜாவை கைது செய்ய தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஞானவேல்ராஜா தரப்பில் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார். 

Related Stories: