மும்பை : கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசி 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வசிக்கும் பத்து கோடி பேருக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து இருக்கும் கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசியை, ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் சீரம் இன்ஸ்டிடியூட் இணைந்து தயாரிக்க உள்ளது. இந்த தடுப்பூசியின் விலையை 3 டாலர்கள் (ரூபாய் மதிப்பில் 225) என்ற அளவில் விலை நிர்ணயம் செய்துள்ளதாகவும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.