×

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பணிபுரியும் 20 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருச்சி : திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பணிபுரியும் 20 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் குறையாமல் இருந்து வருகிறது. சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுக்கு , பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பணிபுரியும் 20 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் பணிபுரியும் 120 பேரில் 20 பேருக்கு தொற்று உறுதியானதால் காவலர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.



Tags : policemen ,Corona ,police station ,Trichy Gandhi Market , Trichy, Gandhi Market, Police Station, Police, Corona
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து