டெல்லி : புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி சீர்திருத்தங்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், தாய்மொழி கல்வி மூலம் மாணவர்களின் அடித்தளம் சிறப்பாக இருக்கும். பாதியில் படிப்பை நிறுத்தியவர்கள் புதிய கல்விக் கொள்கையால் படிப்பை தொடரலாம். மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்த தேவையில்லை.,புதிய கல்விக் கொள்கை பெரும் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய கருவியாகும்.மாணவர்கள் நலனுக்காக பட்டயப் படிப்புகள் 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் ஆர்வம், திறமை, தேவை போன்றவை மதிப்பிடப்படவே இல்லை. என்றார்.