×

சென்னையில் டேங்கர் லாரிகளில் இருந்து டீசல் திருடிய 9 பேர் கொண்ட கும்பல் கைது

சென்னை: சென்னை புழலில் டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல், டீசல் திருடிய 9 பேர் கொண்ட கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் செல்லும் லாரிகளில் இருந்து டீசல் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 12 டேங்கர் லாரிகள், 2 கார்கள், 3 பைக், 500 லிட்டர் டீசல் மற்றும் 700 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் திருடிய கும்பல் அதில் கலப்படம் செய்து விற்பனை செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.



Tags : Chennai , 9 arrested for stealing petrol and diesel from tanker trucks in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...