சென்னை: திமுக வர்த்தகர் அணி கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. மாநில செயலாளர் காசி முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் கடலூர் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் ரமேஷ், மாநில துணை தலைவர் அய்யாத்துரை பாண்டியன், மாநில இணை செயலாளர் ஜெயன், துணை செயலாளர்கள் வி.பி.மணி உட்பட 70 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விபரம் வருமாறு: கோயம்பேடு சந்தையை உடனடியாக திறக்க வேண்டும். இ-பாஸ் முறையை மத்திய அரசு வேண்டாம் என்று சொன்னாலும், வருமானத்துக்கு ஆசைப்பட்டு தொடர்வது நல்லதல்ல. கட்டுப்பாடுகளுடன் கூடிய பயணத்தை அனுமதிப்பது லஞ்சத்தை ஒழிக்கும். எனவே இ-பாசை இதை ரத்து செய்யாவிட்டால் திமுக வர்த்தகர் அணி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.