×

ரவுடி கொலை

பெரம்பூர்: வியாசர்பாடி மல்லிப்பூ காலனி 1வது தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (எ) செல்ல குஞ்சி (29). இவர், நேற்று இரவு 7 மணி அளவில் கொடுங்கையர் ஆர்.ஆர். நகர் டி பிளாக் அருகில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 4 பேர் தாமோதரனை அரிவாளால் சரிமாரியாக வெட்டினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த கொடுங்கையூர் போலீசார் தாமோதரன் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட தாமோதரன் மீது வியாசர்பாடி காவல் நிலையத்தில் 7 வழக்குகள் இருப்பதும், அருண், கட்ட பிரகாஷ் உள்பட 4 பேர் சேர்ந்து அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியதும் தெரிய வந்தது. தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Rowdy , Rowdy, murder
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...