உத்திரமேரூர்: உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களில் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு மக்கள் வாழ்கின்றனர். இந்தவேளையில், ரூ.10 ஆயிரம் கோடியில், சென்னை- சேலம் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டன. சென்னையில் இருந்து சேலம் வரை 274 கிமீ தூரம் கொண்ட இந்த சாலை, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்தில் மட்டும் சீத்தனஞ்சேரி, சாத்தனஞ்சேரி, மலையாங்குளம், புத்தளி, புலிவாய், மணல்மேடு, கருவேப்பம்பூண்டி, ஒழுகரை, சிலாம்பாக்கம், வெங்காரம், அனுமந்தண்டலம், மானாம்பதி, பெருநகர் உள்பட 20 கிராமங்கள் வழியாக சாலை அமைக்கப்படுகிறது. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள், விவசாய கிணறுகள், 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள், கண்மாய், ஏரி, கால்வாய் என நீர்நிலைகள் மட்டுமின்றி வனப்பகுதிகளும் பாதிப்படைக்கின்றன.