கர்நாடகம் திறந்து விட்ட தண்ணீர் மேட்டூர் வந்தது: ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக கபினியில் இருந்து விநாடிக்கு 40,000 கன அடி வீதமும், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து விநாடிக்கு 6,000 கனஅடி  வீதமும் காவிரியில் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் நேற்று காலை இரு மாநில எல்லையான பிலிகுண்டுலு பகுதியை வந்தடைந்தது. முதலில் விநாடிக்கு 8,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து,படிப்படியாக அதிகரித்து நண்பகல் 21 ஆயிரம் கனஅடியானது. மாலையில் 26 ஆயிரம் கனஅடியாகவும். இரவில் 30 ஆயிரம் கன அடியாகவும் உயர்ந்தது.

இதனால்,ஒகேனக்கல் ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனிடையே, ஒகேனக்கல்லில் இருந்து நேற்று பிற்பகலில் அடிப்பாலாறு பகுதிக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. இதனால்,மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. மாலை 6 மணியளவில் 6 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இன்று காலை மேட்டூருக்கு அதிகளவில் தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்பதால், மீனவர்கள் காவிரியில் மீன்பிடிக்கச் செல்லவும், படகு போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: