சென்னை: NAC ஜுவல்லர்ஸ்-க்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. போலியாக ரசீது தயாரித்து பணப்பரிவர்த்தனை செய்த வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள NAC நகைக்கடை கட்டடம் முடக்கப்பட்டுள்ளது. துபாய், ஹாங்காங்கிலிருந்து தங்கம் வாங்கப்பட்டதாக போலி பில் தயாரிக்கப்பட்டது அம்பலமானது. முறைகேடு தொடர்பாக NAC ஜுவல்லர்ஸின் உரிமையாளர் ஆனந்த பத்மநாபன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.