×

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி

தென்காசி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எம்.எல்.ஏ தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்காசியில் வாசுதேவநல்லூர் தொகுதி அண்ணா திராவிட முன்னேற்ற கழக உறுப்பினராக இருப்பவர் எம்.எல்.ஏ மனோகரன். இவர் நேற்றைய தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து பரிசோதனையின் முடிவுகள் வெளியான நிலையில் எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்காசிக்கு நாளைய தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். இதனால் முதல்வர் வருகையின்போது நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதனையடுத்துதான் வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ மனோகரன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். தற்போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தென்காசி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் தமிழக முதல்வரின் வருகைக்காக கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நெல்லை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர், நெல்லை மாவட்ட கொரோனா நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் மற்றும் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் இரு மருத்துவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Manokaran ,constituency ,district ,Vasudevanallur ,Tenkasi ,AIADMK , Tenkasi, Vasudevanallur constituency AIADMK MLA Manokaran, corona infection
× RELATED மனைவியை கழுத்தை அறுத்து கொன்று கணவன் தற்கொலை