மதுரை: பிளாஸ்மா தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் தேவையான அளவில் கையிருப்பு உள்ளது. சுகாதாரத்துறை எடுத்த நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று குறையத் தொடங்கி உள்ளது. இந்தியாவிலேயே அதிக பரிசோதனைகள் தமிழகத்தில் தான் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.