கோவை: கோவையில் டவுசர் கொள்ளையர்கள் மீண்டும் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் இருகூர் அருகே ஆளில்லாத வீட்டின் பூட்டை உடைத்து டவுசர் கொள்ளையர்கள் நேற்றிரவு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு, குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் மட்டுமே இருந்ததால், ஆத்திரத்தில் அவற்றை கலைத்துபோட்டுவிட்டு கொள்ளையர்கள் சென்றனர்.
பின்னர் மற்றொரு வீட்டில் அந்த கொள்ளையர்கள் பொருட்களை திருட சென்றுள்ளனர். அப்போது அவர்கள் புகுந்ததைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர். இதனைக்கண்ட டவுசர் திருடர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் கொள்ளை முயற்சி நடந்த வீடுகளில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.