புதுடெல்லி: இந்தியாவுக்காக தன்னலமின்றி சேவை செய்தவர் சுஷ்மா ஸ்வராஜ் என அவரது முதலாண்டு நினைவு தினத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹரியானாவில் பிப்ரவரி 14, 1962ம் ஆண்டு பிறந்த சுஷ்மா சுவராஜ் 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு 1998ம் ஆண்டு முதல்வராக பதவியேற்றதன் மூலம் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையையும் பெற்றார். 2014ம் ஆண்டு முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அவர் சிறுநீரக பாதிப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி உயிரிழந்தார். அவரது முதலாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.