கோவை: கோவை அருகே நண்பனுடன் சேர்ந்து சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்த 2 இளைஞர்கள் போச்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 7ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கவுண்டபாளையம் பிரபு நகரை சேர்ந்த 22 வயதான சந்தோஷிற்கு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போன் செய்து சிறுமியை தனது வீட்டிற்கு வரவழைத்த சந்தோஷ், அங்குள்ள குப்பைமேட்டின் மறைவான பகுதிக்கு கூட்டி சென்றார்.