சேலம்: சேலம் அருகே பெற்றோர்கள் காதலை ஏற்க மறுத்ததால் இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையும் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்கா அருகே ஈரியூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள கோவில் புறத்தில் இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த குமார் என்பவரும், சின்னசேலம் அருகே உள்ள செம்பாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கவிதா என்பவரும் சென்னிமலை காட்டுக்கொட்டாய் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளனர்.