சேலம் அருகே இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை: காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு..!!

சேலம்: சேலம் அருகே பெற்றோர்கள் காதலை ஏற்க மறுத்ததால் இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையும் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்கா அருகே ஈரியூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள கோவில் புறத்தில் இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த குமார் என்பவரும், சின்னசேலம் அருகே உள்ள செம்பாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கவிதா என்பவரும் சென்னிமலை காட்டுக்கொட்டாய் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளனர்.

 இவர்கள் இருவரும் வெகு நாட்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இவர்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு ஏற்படவே, இருவரும் ஈரியூர் காட்டுக்கொட்டாய் வனப்பகுதியில் நேற்றிரவு திருமணம் செய்துக் கொண்டு அங்குள்ள கோவிலில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இளம் ஜோடி தற்கொலை குறித்து கீழ்குப்பம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Related Stories: