இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை நெருங்கினாலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 13.28 லட்சமாக உயர்வு!!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 19.64 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 13.28 லட்சத்தை தாண்டியது. நாட்டில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 56,282 பேர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 19,64,536 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,95,501 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,13,28,336 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 904 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 40,699 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 67.19% ஆக உயர்ந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 2.09% ஆக குறைந்துள்ளது.   

மாநிலங்கள் வாரியான விவரம்!!

*மகாராஷ்டிராவில் நேற்று 10,309 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,68,265 ஆகி உள்ளது  நேற்று 334 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,476 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,165 பேர் குணமடைந்து மொத்தம் 3,05,521  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

*தமிழகத்தில் நேற்று 5,175 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,73,460 ஆகி உள்ளது  இதில் நேற்று 112 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,461 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,051 பேர் குணமடைந்து மொத்தம் 2,14,815 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

*ஆந்திர மாநிலத்தில் நேற்று 1,218 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,84,461 ஆகி உள்ளது  இதில் நேற்று 77 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,681 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,729 பேர் குணமடைந்து மொத்தம் 1,04,354 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

*கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,619 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,51,449 ஆகி உள்ளது  இதில் நேற்று 100 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 2,804 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,407 பேர் குணமடைந்து மொத்தம் 74,679 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

*டெல்லியில் நேற்று 1,076 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,40,232 ஆகி உள்ளது  இதில் நேற்று 11  பேர் உயிர் இழந்து மொத்தம் 4,044 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 890 பேர் குணமடைந்து மொத்தம் 1,26,116 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Related Stories: