கொழும்பு: இலங்கையில் நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவானது. இலங்கையில் கடந்த மார்ச் 2ம் தேதி நாடாளுமன்றத்தை கலைத்து, புதிதாக தேர்தல் நடத்த அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். ஆனால், கொரோனா தொற்று காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட தேர்தல், நேற்று நடந்தது. மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நின்று வாக்களித்தனர். மாலை, 5 மணி நிலவரப்படி, 70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடக்கிறது. இத்தேர்தலில் ராஜபக்சே கட்சிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.