சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் தமாகா சார்பாக வாழ்த்துகள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை, சரியான முறையில் கடைபிடித்து, நாட்டிற்காகவும், மக்களுக்காவும், சேவையாற்றி, அவற்றை, வழிநடத்தும் மிகப் பெரிய பொறுப்பு ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு உண்டு. தாங்கள் அனைவரும் தங்கள் கடமைகளை தவறாமல் கடைபிடித்து, இந்தியாவின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், உறுதுணையாக இருப்பீர்கள் என நம்புகிறேன். தற்போது தேர்வு பெற்றவர்கள் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: