துபாயிலிருந்து வந்த மீட்பு விமானத்தில் ரூ.38 லட்சம் மதிப்பு தங்கம் சிக்கியது

சென்னை: துபாயிலிருந்து ஏர் இந்தியா மீட்பு சிறப்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை வந்தது. அதில் மீட்கப்பட்ட 175 இந்தியர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, தஞ்சாவூர் காசிமணி கொளஞ்சி (22). முருகன் சந்திரன் (38) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் இருவரையும் தனி அறையில் சோதனையிட்டபோது, அவர்கள் அணிந்திருந்த பெல்ட்டில் தங்கக்கட்டிகள் மறைத்து இருந்தது தெரிந்தது. இருவரிடமிருந்து 731 கிராம் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ₹38 லட்சம். சுங்கத்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், துபாயிலிருந்து சென்னைக்கு வருவதற்காக விமான டிக்கெட் செலவுக்காக இந்த தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாக தெரிவித்தனர். மேலும், துபாயில் இருந்து தங்கக்கட்டிகளை கொடுத்து அனுப்பியது யார்? தங்கக்கட்டிகளை யாருக்காக கடத்தி வந்தனர் என அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Related Stories: