வேளாண் பாதுகாப்பு மண்டல விதிகள் தயார்

மதுரை: வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பகுதியில் மணல் அள்ள தடைக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘வேளாண் பாதுகாப்பு மண்டல விதிகள் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்’’ என்றார்.  கனிமவளத்துறை திட்ட இயக்குநர் இந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Related Stories: