ஊரடங்கு உத்தரவு மீறல் தமிழகத்தில் 136 நாளில் 8.52 லட்சம் வழக்கு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது, பல்வேறு தளர்வுகளுடன் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 136 நாட்களில் 8 லட்சத்து 52 ஆயிரத்து 515 வழக்குகள் பதிவு செய்து 9 லட்சத்து 38 ஆயிரத்து 125 பேரை போலீசார் கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து 6 லட்சத்து 66 ஆயிரத்து 669 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக நேற்று வரை 19 கோடியே 67 லட்சத்து 17 ஆயிரத்து 928 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories: