செய்யூர்: மதுராந்தகம் அடுத்த முதுகரை கிராமத்தில் தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கத்தின் துவக்க விழா நேற்று நடந்தது. இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான ஜோயல் சுந்தர்சிங் தலைமை தாங்கி, அலுவலகத்தை திறந்து வைத்தார். தேசிய பொது செயலாளர் ரகு முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் தீப்பொறி சௌந்தரராஜன், மாநில சட்ட ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ஜெய்சிங் ராபர்ட், ஜான்பால், டேனியல் டக்லஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட பொருளாளர் மணிவேல் ஜோசப் நன்றி கூறினார்.