ஆவடி, திருநின்றவூர் பகுதியில் கொரோனா தொற்றுக்கு 4 பேர் பலி

ஆவடி: ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு 3 பெண்கள் உட்பட 4பேர் பலியாகி உள்ளனர். ஆவடி, பஜா நகர், 4வது தெருவில் 59வயது  பெண்மணியும், ஆவடி அருகே திருமுல்லைவாயல், ஆஸ்பத்திரி சாலையில் 85பெண்மணி ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்க்கப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்த போது அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவரும் இறந்தனர்.

இதே போல், ஆவடி, காமராஜர் நகர், 2-வது தெருவில் 51வயது மதிக்கத்தக்க ஆண் நபர் வசித்து வந்தார். இதற்கிடையில், கடந்த மாதம் 8ந்தேதி அவர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த போது அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து ஆவடி மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மேற்கண்ட 3சடலங்களையும் மீட்டனர். பின்னர், உறவினர்கள் முன்னிலையில் இரு சடலங்களையும் ஆவடி, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் உள்ள சுடுகாட்டில் தகனம் மற்றும் அடக்கம் செய்தனர்.

இதே போல், ஆவடியை அடுத்த திருநின்றவூர், லட்சுமி நகரில் 42வயது மதிக்கத்தக்க பெண்மணிர் கடந்த 3ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பெண்மணி நேற்று முன்தினம் இரவு இறந்தார். தகவலறிந்து திருநின்றவூர் பேரூராட்சி சுகாதார அதிகாரிகள் சடலத்தை மீட்டு அம்பத்தூரில் உள்ள கிறிஸ்துவ சுடுகாட்டில் உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்தனர்.

Related Stories: