ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆளும் காங்கிரசில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 6 பேர் இணைந்தது பற்றி விளக்கம் அளிக்கும்படி, சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் மோதல் ஏற்பட்டதால், சச்சின் தனது ஆதரவு எம்எல்ஏ.க்கள் 18 பேருடன் கட்சியில் இருந்து வெளியேறி விட்டார். அவர்கள் பாஜ.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கெலாட் அரசுக்கு மேலும் சிக்கல் அளிக்கும் வகையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி புதிய பிரச்னையை கிளப்பி இருக்கிறார்.