கோபி: கோபி அருகே விவசாய நிலத்தில் ஒரு கிலோ எடையுள்ள ராட்சத காளான்கள் முளைத்துள்ளன. இவை உணவுக்கு உகந்ததா? என அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த நம்பியூர் பொத்தபாளையத்தை சேர்ந்தவர் இளங்கோ, விவசாயி. இவர் தோட்டத்தில் இயற்கை முறையில் வாழை, காய்கறி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் நிலக்கடலை பயிரிட்ட பகுதியில் இளங்கோ களப்பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு முளைத்து இருந்த ராட்சத காளான்களை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். ஒவ்வொரு காளானும் 1 கிலோவிற்கு மேல் எடை உள்ளதாக இருந்தது.