மாஸ்க் அணிவோம், உயிரை காப்போம்...! கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 112 பேர் உயிரிழப்பு; மேலும் 5,175 பேர் பாதிப்பு: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,73,460-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,08,254 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39,795 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 12,82,215 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 52,509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டு 857 உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 5,175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,14,815 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 6,031 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 112 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 4,461- ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,044 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,05,004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 125 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 54,184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 29,53,561 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 76.27% ஆக உள்ளது.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 61,166 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 5,175 பேருக்கு தொற்று உறுதியானது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,65,509 ஆண்கள், 1,07,924 பெண்கள், 27 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

     ^ மகாராஷ்டிரா - 02

     

     ^ டெல்லி - 03

     ^ கேரளா - 02

     ^ கர்நாடகா - 10

     ^ ஆந்திரப்பிரதேசம் - 03

     ^ புதுச்சேரி - 01

     ^ ஒடிஷா - 01

     ^ பீகார் - 01

     ^ தெலுங்கானா - 03

     ^ பஞ்சாப் - 03

     ^ மேற்கு வங்கம் - 03

     ^ ஜம்மு-காஷ்மீர் - 01

     ^ கோவா - 01

* வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

     ^ சிங்கப்பூர் - 01

     ^ கத்தார் - 01

Related Stories: