சென்னை: எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாளை கோவாக்சின் 2ம் கட்ட தடுப்பூசி போடப்படுகிறது. ஐதராபாத் நகரை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு ‘கோவாக்சின்’ (COVAXIN) என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. ஐசிஎம்ஆர், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி மருந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது. ‘கோவாக்சின்’ தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்தது.
முதற்கட்ட பரிசோதனையில் வெற்றி : செங்கல்பட்டு SRM மருத்துவமனையில் நாளை 2ம் கட்ட கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை!!
- கட்ட
- கோவாக்ஸ் தடுப்பூசி சோதனை
- கட்டம் 2
- செங்கல்பட்டு எஸ்.ஆர்.எம் மருத்துவமனை
- மருத்துவமனை
- செங்கல்பட்டு எஸ்.ஆர்.எம்