சென்னை: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் இந்துக்களின் நெடுநாள் கனவு நிறைவேறும் நாள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க பூமிபூஜை விழாவில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.