சென்னை: தென்மேற்குப் பருவக்காற்று தீவிரத்தால் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் மலைச்சரிவில் அதி கனமழை பெய்யக்கூடும். மேலும் கோவை, தேனி மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.